Tuesday, December 21, 2010

எனக்கு இரண்டு காதலிகள்



ஒருத்தி
உன் வீட்டில்
வசிக்கிறாள்

இன்னொருத்தி
என் இதயத்தில்
வசிக்கிறாள்
.................................................

உன்னைக்
கண் திறந்து
பார்க்கிறேன்

அவளை
கண் மூடிப்
பார்க்கிறேன்
.................................................

அவளைக்
கூட்டிக் கொண்டுதான்
உன்னைப்
பார்க்க வருகிறேன்

உன்னைப் பார்த்துவிட்டு
அவளோடுதான்
வீடு திரும்புகிறேன்
.................................................

உன்னிடம்
ஒருமுறை
காதலைச்
சொல்வதற்காக

அவளிடம்
ஓராயிரம்முறை
ஒத்திகை
பார்த்திருக்கிறேன்
.................................................

நீ அவளைப்
பார்க்கவேண்டுமென்றால்
சொல்
அனுமன்
தன் நெஞ்சைப் பிளந்து
ராமனிடமே
ராமனைக் காட்டியது மாதிரி
உன்னிடமே
உன்னைக் காட்டுகிறேன்
.................................................